ஹைட்ரோ கார்பன் – தேவையும் புரிதலும்
நித்தியானந்த் ஜெயராமன்   தமிழில்: ஜனகப்ரியா

by olaichuvadi

ஒவ்வொரு போராட்டத்தையும் ஏதோ ஒரு முத்திரை குத்தி சிறுமைப் படுத்துவதைவிட போராட்டக்காரர்கள் எழுப்புகிற பிரச்சனைகளின் தனித்தன்மை என்ன என்பதைக் கருதிப் பார்ப்பது நல்லது.

2017, பிப்ரவரி 15 அன்று, இந்திய நடுவண் அரசு கடற்கரை சார்ந்த பகுதிகள், விளைநிலங்கள் அடங்கிய 44 இடங்களில் ஹைடிரோ கார்பன் எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவித்தது. அறிவிப்பு வெளியான மறுநாளே தென்தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நெடுவாசல்’ என்று அறியப்பட்ட சின்னஞ்சிறு கிராமத்தில் எதிர்ப்புக் கிளம்பியது.

நெடுவாசல் பகுதியில் கண்டறியப்பட்ட எண்ணெய் படிநிலம் கர்நாடகாவைச் சேர்ந்த ‘ஜெம் லேபரட்டரீஸ்’ எனும் நிறுவனத்துக்கு வழங்கப் பட்டிருந்தது. அரசின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் போராட்டம் வலிமையாக உருவானது. ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து ஒருங்கிணைந்த வலிமையான ஆற்றல்களான இளைஞர்கள் போராட்டத்துக்கு வலிமை சேர்த்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பாளர்களின் தொழில் நுட்பரீதியிலான வாதங்களின் நம்பகத்தன்மையையும் துறைசார்ந்த அறிவுத்திறனையும் கேள்விக்குள்ளாக்கினர். நடுவண் அரசின் கப்பல், சாலைப் போக்குவரத்து இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மக்களைச் சந்தித்து, கண்மூடித்தனமாக இத்திட்டத்தை எதிர்க்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். எதிர்ப்பவர்கள் எல்லோரும் விஞ்ஞானிகளா?  திட்டத்தை எதிர்க்கும் அளவுக்கு அவர்களுக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் கேட்டார்.

நெடுவாசல், அதன் சுற்றுப்புற கிராமங்களில் வாழும் மக்கள் இத்திட்டத்தைக் குறித்து தேவையான அளவுக்கு விழிப்புணர்வு பெற்றிருக்கவில்லை, ஆயினும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களுடன் தொடர்ந்து உரையாடல்கள் நிகழ்த்தியதன் விளைவாகவும் ஆழ்நிலத்திலிருந்து எண்ணெய் எடுத்தல் தொடர்பான ஆய்வு, உற்பத்தி, உற்பத்தி செய்த எரிபொருளை பிற இடங்களுக்கு விளை நிலங்களின் வழியாக கொண்டு செல்வதால் விளையும் தீமைகள் போன்றவற்றைப் பற்றி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் செயல்பாடுகளின் மூலமாக இத்திட்டத்தின் சாதக பாதங்களைப் பற்றிச் சுயமாக ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிற அளவுக்கு அறிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஹைட்ரோகார்பன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அப்பகுதியின் வளமான வேளாண்மைப் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என இப்பகுதி விவசாயிகள் அஞ்சுகிறார்கள். டெல்டாப் பகுதியில் செழிப்பான நிலமும்,  நிலத்தடி நீர்வளமும் கொண்ட ஒரு பகுதியில் அமைந்திருக்கும் நெடுவாசல் டெல்டாப் பகுதியின் கடை மடைப் பகுதியைப் போலல்லாமல் பல்பயிர் சாகுபடிக்கேற்ற பொருளாதார வாய்ப்பைக் கொண்டிருக்கிறது.

திட்ட எதிர்ப்பாளர்களால் முன்வைக்கப்படுகிற பிரச்சனைகள் இவற்றுடன் இணைந்தவையாகும். ஒவ்வொரு எதிர்ப்பையும் கொச்சைப்படுத்தி, போராடுகிறவர்களை தீவிரவாதிகள், தேசத் துரோகிகள் என முத்திரை குத்துவது, அந்நிய நிறுவனங்களிடம் கூலி பெற்றுக்கொண்டு போராடுகிறார்கள் என்று வசைபாடி நிராகரிப்பது ஆகியவற்றை விடவும் அவர்கள் எழுப்புகிற பிரச்சனைகளின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டு அவர்களுடன் இணைந்து நிற்பது பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறான முடிவுக்கு இந்த விஷயத்தைக் குறித்த கேள்விகளையும் அதற்கான உண்மைகளையும் தொடர்ந்து காண்போம்:

நெடுவாசல் மக்கள் கண்மூடித்தனமாக இத்திட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ONGC டெல்டாப் பகுதியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பு ஏதுமின்றி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் செயல்பாட்டில் ஈடு பட்டிருக்கிறது. இத்திட்டம் பற்றிய விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ளா மல் நெடுவாசல் மக்களால் எவ்வாறு இதனை எதிர்க்க முடியும்?

திட்டம் குறித்த தொழில் நுட்ப விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லாமலிருக்கலாம். அதே பொழுதில் கிராம மக்கள், ஆழ் நிலத்திலிருந்து  ஹைட்ரோ கார்பன் எடுப்பதனால் ஏற்படக்கூடிய பொதுவான விளைவுகள் குறித்த விழிப்புணர்வுடன்தான் இருக்கிறார்கள்.  இதற்கு நிலக்கரிப் படுகைகளிலிருந்து மீத்தேன் (CBM)  எடுக்கும் திட்டம் தஞ்சாவூரில் 2010-2016 கால கட்டத்தில் செயல்படுத்த முனைந்ததை எதிர்த்து  பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் நிகழ்ந்தன. இப்போராட்டங்களுக்கான தேவை மற்றும் திட்டத்தின் விளைவுகளைப் பற்றியும் புகழ்பெற்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் மக்களுக்கு விளக்கியிருந்தார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டு அதிலிருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் விளைவுகளால் வேளாண்மைக்கு ஏற்படும் மோசமான தீமைகள் குறித்த பரந்துபட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் முறையில் பல போராட்டங்களை மக்கள் ஆதரவுடன் நடத்தினார், இவ்வாறான மக்கள் திரள் போராட்டங்களின் மூலமாக ஹைட்ரோ கார்பன் (அல்லது மீதேன்) திட்டங்களின் காரணமாக சுற்றுச் சூழல் கேடுறுவதையும் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பின்னடைவுகளையும் தெளிவாகப் புரியச் செய்தார்.

‘‘நெடுவாசல் அருகில் ONGC நிறுவனம் 2008-2009 காலத்தில் ஓர் ஆழ்துளைக் கிணறு அமைத்ததன் பின்னால் இத்திட்டம் பற்றி கிராம மக்களுக்கு புதிய உண்மைகள் தெரிய வந்தன. ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு 3 மாதங்கள் கழிந்த பின் அந்தக் கிணற்றிலிருந்து ஏதோ ஒரு வாயு வெளியேறி இரவும் பகலும் எரிந்து கொண்டே இருந்தது. அந்த வாயு சில வேளை ஆரஞ்சு நிறத்தில் கரும்புகையுடன் எரிந்தது. இன்னொரு சமயம் நீல நிறத்தில் வாடை இல்லாமல் எரிந்தது என்கிறார் ஜி. அமுதா என்ற பொறியியல் பட்டதாரி. சென்னையில் பணிபுரிந்த இவர் நகர வாழ்வின் மீது வெறுப்புற்று வேலையை உதறிவிட்டு சொந்த கிராமத்துக்குத் திரும்பி தன் நிலத்தில் சாகுபடி செய்கிறார். அவருடைய நிலத்தில் ஒரு பள்ளம் (குழி) தோன்றியது. அது நிறையவும் எண்ணெய்க் கழிவுகள் தேங்கியிருந்ததைக் காட்டுகிறார்.

‘‘அதைப் பாருங்கள், இந்தக் கழிவுகள் ஏழு ஆண்டுகளாக என் நிலத்தில் இந்தப் பள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. பெரிய மழை பெய்யும்போது தரைக்கு மேலே கிளம்பி அருகில் உள்ள நிலத்திலும் பரவுகிறது. ஆய்வு நிலை” யில் வெளியேறும் ஒரு சிறிய அளவு கழிவு இது. மீத்தேன் உற்பத்தியின் போது மிக அதிக அளவில் கழிவுகள் உற்பத்தியாகும்.

‘‘என் கண் முன்னே காணும் இதற்கும் இதன் விளைவுகளுக்கும் அவர்கள் (ONGC) பொறுப்பேற்பார்கள் என்பதை நான் எவ்வாறு நம்ப முடியும்?’’ என்று அவர் கேட்கிறார்.

நெடுவாசலிலிருந்து 100 கி.மீ. தொலைவில் நிறுவனம் (ONGC) 200க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளை இயக்கிக் கொண்டிருக்கிறது.  2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட எண்ணெய்க் குழாய்களிலிருந்து குருடாயில் கசிந்து நாகப்பட்டினம் பகுதியில் விளை நிலத்திலிருந்த பயிர்கள் நாசமாயின, நீர்ப்பாசனக் கால்வாய்கள் பாழாயின, நிலத்தடி நீரும் கெட்டுப் போயிற்று.

‘‘எண்ணெய்க் கசிவினால் விளை நிலமானது இப்போது சரி செய்ய இயலாத அளவுக்குப் பாழாகி விட்டது. தொடர்ந்து அதிகாரிகளிடம் மனுக்களைக் கொடுத்து அலைந்ததன்  பயனாக மிகக் குறைந்த அளவிலான தொகை இழப்பீடு என்ற பெயரில் கிடைத்தது. எண்ணெய்க் கசிவினால் பாழான நிலங் களைச் சீர்செய்ய மிக நீண்ட காலமாகும்” காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் செயல்பாட்டாளராகவும், விவசாயியாகவும் இருக்கும். க.தனபால் சொல்கிறார்,.மக்கள் வாழும் பகுதிகளுக்கருகில் எண்ணெய்க் கசிவில் நெருப்பு பற்றிக் கொண்டு தொடர்ச்சியாக எரிவது போன்ற நிகழ்வுகள் அச்சத்தையும் இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறையையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. ளிழிநிசி நிறுவனம் தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளை மூடவும் திட்ட விரிவாக்கத்தை எதிர்க்கவும் விவசாயிகள் திரள்கிறார்கள். பொது மக்களின் எதிர்ப்புக் குரலும் கேட்கிறது.

பொது கருத்துக் கேட்புக்களின்போது மக்கள் நிறைய பிரச்சனைகளை எழுப்பினார்கள். ளிழிநிசி நிறுவனம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியிருப்பதைப் பற்றியும் அது தொடர்பாக மக்கள் தெரிவித்த புகார்கள் கிடப்பில் போடப் பட்டுள்ளன. தமிழக மாசுகட்டுப்பாடு வாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை உரிய முறையில் விதிமுறைகளை அமல்படுத்தத் தவறியிருக்கின்றன.

2014 இல் நாகப்பட்டினத்தில் ONGC ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்பின்போது காற்று, நீர் ஆகியவை மாசு அடைதல் நிலத்தடி நீர் ஆதாரம் வறண்டு போவது, சுவாச கோளாறுகள் அதிகரிக்குமென்றும் விளை நிலங்கள் பாழாகுமென்றும் உள்ளூர் விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டன.

2015 இல் தஞ்சாவூரில் விளைநிலத்தில் ONGC நிறுவனம் அமைத்திருந்த ஷெட் ஒன்றை விவசாயிகள் அடித்து நொறுக்கினார்கள். அங்கே ஏற்பட்டிருந்த வாயுக் கசிவு தொடர்பாக மிக லேசான பின் விளைவு என்று தனது ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

‘‘எண்ணெய்யைப் பிரித்தெடுப்பது அல்லது எரிவாயு எடுப்பது என்ற செயல் பாடு சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் இல்லாமல் நடந்துவிடும் என்று தான் மக்கள் அறிந்திருந்தனர். அதிகாரிகளின் பேச்சை நம்பியுமிருந்தனர்; அதனால் மக்கள் அப்போது தீவிரமாக எதிர்க்கவில்லை. இப்போதுள்ள நிலையில் ஹைடிரோ கார்பன் எடுப்பது என்பது தீங்கற்ற மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தாத செயல் என்று அரசாங்கம் மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். அவ்வாறு ஏதும் பாதிப்பு நிகழ்ந்தால் பாதிக்கப்பட்ட நிலத்தைச் சீர் செய்ய உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்.’’ போன்ற விசயங்களை தனபாலன் சுட்டி காட்டினார்.

நெடுவாசல் மக்கள் சோதனை, ஆய்வு என்ற தொடக்க நிலையிலேயே இத்திட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை?

நெடுவாசலில் சோதனை முறையில் அமைக்கப்பட்ட ஆழ் துளைக் கிணறு என்பது உண்மையில் நெடுவாசலில் இல்லை, ஆனால் அருகில் இருக்கும் கருக்காக் குருச்சி என்றழைக்கப்படும் கிராமத்தில் இருக்கிறது. அங்கு வசிக்கும் கோவிந்த வேளார், குழந்தை வேளார் ஆகிய இரு சகோதரர்களுக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் அப்போது வாழை மற்றும் கரும்பு வேளாண்மை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ‘‘அவர்கள் முதலில் என்னிடம் 2008 ஆம் ஆண்டில் வந்தார்கள். ஆனால் திட்டத்தைப் பற்றிய எந்த விபரத்தையும் என்னிடம் கூறவில்லை.’’ இவர் மண்பாண்டங்கள் சுட்டெடுக்கும் சூளையின் அருகில்  மரங்களை வேலியாக கொண்ட ஒரு அழகிய வளாகத்தில் உள்ள தன் வீட்டில் வசித்து வருகிறார். ‘‘அவர்கள் சில சோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகச் சொன்னார்கள். எங்களுடைய நிலத்தில் பெட்ரோல் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதா? என்று சோதனை செய்து பார்க்கப் போவதாகவும், அவ்வாறு கிடைத்தால் ஒரு குறுகிய காலத் திட்டத்தில் அந்த வேலை முடிந்துவிடும் என்பதாகவும் சொன்னார்கள். நாங்கள் நிலத்தைப் பிரித்துக் கொடுக்க விரும்பவில்லை; ஆனால் அவர்கள் விடாப்பிடியாக நிலத்தை வாங்கி விடுவதில் தீவிரமாக இருந்தார்கள். விஏஓ விடமும் தாசில்தாரிடமும் சொல்லி, இது ஒரு அரசாங்கத் திட்டம் என்றும் கட்டாயம் நிலத்தைக் கொடுக்கவேண்டும் என்றும்  வற்புறுத்தினார்கள். ஒரு துண்டுக் காகிதத்தில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டார்கள். அந்தக் கடிதத்தின் நகல் கூட எனக்குத் தரப்படவில்லை’’ என்று நினைவு கூர்ந்தார்.

நெடுவாசல் ஆய்வு திட்டத்துக்காக சூழலியல் மீது ஏற்படும் தாக்கம் குறித்து சுற்றுச் சுழல் தாக்க மதிப்பீடு அறிக்கை (EIA), 2006 இன் படி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும் ஆனால் நடத்தப்படவேயில்லை.  பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்து தெரிவிப்பதற்கு சட்டப்பூர்வமாக ஒரு பொதுக் கருத்தறிதல் தேவைப்படுகிறது.  மத்திய சுற்றுச்சுழல் அமைச்சத்தின் இணையதளமானது வணிகத்தை எளிதாக்கவும் மற்றும் வெளிப்படைத்தன்மைக்காகவும் முக்கிய தேவையான அனைத்து தகவல்களும் அன்றைய தேதி வரைக்கும் இணையதளத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது, ஆனால் இத்திட்டத்தை பொருத்தவரையில் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடும் செய்யவில்லை சுற்றுச்சுழல் அனுமதியும் பெறப்படவில்லை.

2006 இல் நெடுவாசல் திட்ட ஆய்வுக்காக சுற்றுச் சுழல் தாக்க அறிக்கை. சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இணைய தளத்தில் அன்றைய தேதி வரைக்கும் திட்டத்துக்குத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடித்து உற்பத்தி தொடங்குவதற் கான ஹைட்ரோ நீர்ம விசையாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தது. உண்மையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திடமிருந்து சூழலியல் பாதிப்பு இல்லை என அனுமதி சான்றிதழ் ஒன்று மட்டுமே பெறப்பட்டிருந்தது. அதுவும் 2013 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவோணம், கரம்பக்குடி ஆகிய இரு இடங்களில் செயல்படுவதற்கானது தான்; அதில் நெடுவாசல் குறிப்பிடப்படவில்லை.

இத்திட்டத்தைப் பற்றி அறியப்பட்டிருப்பது என்ன?

நெடுவாசலில் எண்ணெய் எடுப்பதற்கான நிலக்குத்தகை (7ஆண்டுக்கானது) 2019 டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைகிறது. குத்தகைக்குப் பெறப்பட்ட நிலப் பரப்பு என்பது 10 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அந்த நிலப்பரப்பிலிருந்து மட்டும்  தானத்திலிருந்து எண்ணெய்யோ, வாயுவோ ஒப்பந்ததாரர் எடுத்துக் கொள்ள முடியும். இது 2015 அக்டோபரில் வெளியிடப்பட்ட நடுவண் அரசின் அறிக்கையின் பகுதியாகும். இது குறைந்தபட்ச எண்ணெய் வளத்தையும் சுரண்டுவதற்குத் தனியார் நிறுவனங்களை வரவேற்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இத்திட்டமானது நிலக்கரிப் படிவுகளிலிருந்து மீதேன் வாயு எடுக்கும் திட்டமோ அல்லது எரிவாயுவைப் பிரித்தெடுக்கும் திட்டமோ அல்ல. அதனால் ஒரு நீர்மப் பொருளிலிருந்து வெவ்வேறு திரவத்தை பிரித்தெடுப்பது போன்றோ அல்லது திரவத்தை ஆவியாக்கி வெவ்வேறாகப் பிரிப்பது போன்ற பயன்பாட்டைத் தராது. இருப்பினும் இதன் மூலம் மேலதிக மதிப்பீடுகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். பழைய முறையில் எண்ணெய் எடுப்பது, எரிவாயுவைப் பிரித்தெடுப்பது ஆகியவை (நிறுவனத்தின்) திட்டத்தின் நோக்கமாக முன்வைக்கப்பட்டாலும், 430000 டன்கள் எண்ணெய்யும் அதே அளவில் எரிவாயுவும் கிடைக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. பத்திரிகையாளர் சந்திப்பின்போது ‘ஜெம் லேபரட்டரீஸ்’ நிறுவனம் இதற்குமேல் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை எனத் தெரிவித்தது.

கடற்கரை சார்ந்த பகுதிகளில் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும் காவேரி டெல்டா பகுதிகளில் உற்பத்தியைத் தொடங்குவதற்குமாக தோண்டப் படும் கிணறுகள் 1750 மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை ஆழம் கொண்டவையாக இருக்கும். நெடுவாசல் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இதே ஆழத்துக்கு அங்கும் கிணறுகள் தோண்டப்படும்.

எப்படி செயற்க்கையான ஹைட்ரோகார்பன்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன?

உற்பத்திக்கான கிணறுகள் தோண்டப்படுவதற்கு முன் மண்ணின் தன்மை எத்தகையது எனக் கண்டறியவும் எவ்வளவு எண்ணெய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என மதிப்பிடுவதற்குமாக அதிக எண்ணிக்கையில் மாதிரிக் கிணறுகளை நிறுவனம் தோண்டியிருக்கும். உற்பத்தி தொடங்கியதும் இம்மாதிரிக் கிணறுகள் மூடப்படும். நெடுவாசலில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் குத்தகைக்கு வாங்கப்பட்ட 10 ச. கி.மீ. பரப்பில் கிணறுகள் தோண்டப்படும்.

குத்தகை நிலம் முழுவதுமே உடனடியாக பயன்பாட்டுக்குள்ளாக்கப்படாது. ஆழ்துளைகள் இடுவதெனத் தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே பணி துவங்கும். தோராயமாக ஒவ்வொரு ஆழ்துளைக் கிணறுக்கும் 5 ஏக்கர் தேவைப்படும்.  கிணறுகளின் எண்ணிக்கையோ கிணறுகள் தோண்டப்படவுள்ள இடமோ பற்றிய விவரம் ஏதுமில்லை காலப்போக்கில் சில கிணறுகள் பயன்பாடற்றவை எனக் கருதி கைவிடப்படவோ அல்லது வேறு பயன்பாட்டுக்கென மாற்றப்படவோ வாய்ப்பிருக்கிறது.

இந்த இடங்கள் மட்டுமின்றி இன்னும் சில கிணறுகள் தோண்டுவதற்கான இடங்கள் கண்டறியப்படும். காலப்போக்கில் சில கிணறுகள் பயன்பாடற்றவை எனக் கருதி கைவிடப்படவோ அல்லது வேறு பயன்பாட்டுக்கென மாற்றப்படவோ வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக உற்பத்தி கிணறுகள் களஞ்சியத்தின் அடி மட்டம் வரை தொண்டப்படும் ஆனால் மாதிரிக்காக (மதிப்பீட்டிற் காக) தோண்டப்பட்ட கிணறுகள் அவ்வளவு ஆழம் தோண்டபடுவதில்லை. ளை மேலும் ஆழமாகத் தோண்டத் தேவையற்ற நிலையையும் கணக்கிலெடுத்துக்கொண்டு உற்பத்திக்கான கிணறுகள் தோண்டப் படுவதே வழக்கமாக இருக்கிறது. ஆழ்துளையிலிருந்து உருவாகி மேற்பரப்பில் அதிகரிக்கும் அழுத்த வேறுபாடுகள் அதிகரிக்கும்பொழுது அந்த எண்ணெய் / எரி வாயு இயல்பீர்ப்புத்தன்மையின் ஏற்படும் அழுத்தக் குறைவுள்ள பகுதிக்குச் செல்கிறது அதன் பின் தானகவே மேல் நோக்கி வரும். ஆழ்துளைக் கிணறுகளின் மூலமாக எடுக்கும் கட்டத்தில் 10 இலிருந்து 15 சதவீதமே தொடக்கநிலையில் பயன் தரக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

இரண்டாவது ‘திரும்பப்பெறுதல்’ என்கிற விஷயமும் சம்மந்தப்பட்டிருக் கிறது. எண்ணெய் அல்லது எரிவாயு படிந்துள்ள தளங்களில் (பாறைகள் அல்லது மணல் பாறைகள்) உள்ளே சிக்கிக்கொண்டிருக்கும் திரவத்தை அல்லது வாயுவை வெளியேற்றுவதற்கு உயர்அழுத்தம் அதிகமுள்ள ஒரு நீர்மத்தை உட்புகுத்த (injecting) வேண்டும். இவ்வாறு நீர்மங்களை உட்செலுத்துவதற்காக அருகாமையில் புதிய ஆழ்துளைகள் இடவேண்டிய தேவை எற்படலாம். அல்லது (இருந்து கொண்டிருக்கும்) மதிப்பீட்டிற்காகத் துளையிடப்பட்ட மாதிரிக்கிணறுகள் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படலாம். காவிரி நிலப்பகுதி பற்றிய ளிழிநிசிளிழிநிசி யின் கூற்றில் உற்பத்தி செய்யப்பட்ட நீர் – ஹைடிரோகார்பன்களின் உற்பத்தியின் போது (பிரித்தெடுக்கப்படும்பொழுது) அகற்றப்படும் துணைப் பொருளான இவை நச்சுத்தன்மை கொண்டதாக மாறியடது- இதை உட்செலுத்தி தான் உள்ளிருப்பவற்றை வெளியேற்றுவதற்குப் பயன்படுகிறது.

மூன்றாவது அல்லது மேம்பட்ட மீட்டெடுத்தல் ஆனது மூல பாறைகளை விரிசல் ஏற்படும் காரியங்கள் நிகழலாம்  முக்கியமான விஷயம் விலையை அதிகமாக நிர்ணயிப்பதன் மூலம் சீர்செய்தல் என்பதுவும் சம்மந்தப்பட்டிருக்க முடியும். உயர் அழுத்தமுள்ள நீர்மங்களை உட்செலுத்தி எண்ணெய்ப் படிவுள்ள அடித்தளங்களை பிளக்கச் செய்தல், கடினமான திடப்பொருட்களினூடாக உதாரணமாக மணல் பரப்பு கடினமான அலுமினியபடிவுள்ள அடித்தளம் ஆகியவற்றில் ஏற்படும் வெடிப்புகள் அல்லது பிளவுகளினூடாக இந்த உயர் அழுத்தமுள்ள நீர்மங்கள் செலுத்தப்படும் பொழுது கூர்முனையுள்ள ஆப்புகளைப் போல செயல்பட்டு உள்ளிருக்கும் திரவம் அல்லது வாயு வெளியேறுவதை எளிதாக்குகிறது.

எவ்வாறு துளையிடுதல் மேற்கொள்ளப்படுகிறது?

ஆய்வுக்காக அல்லது இங்கு எவ்வளவு உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது என்று மதிப்பிடுவதற்காக துளையிடுதல் நிகழும்போது சில பின் விளைவுகள் ஏற்படுகின்றன. ஓர் ஆழ்துளைக் கிணற்றுக்கு தோராயமாக ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படலாம். ஆழ்துளைக் கிணறுக்கான இடத்தயாரிப்பு என்பது நிலத்தைஇடத்தை மட்டப்படுத்துதல் ஒப்புரவாக்குதல், நுழைவாயில், அணுகு சாலைகள் அமைத்தல், காங்ரீட் கான்கிரீட் நடைமேடை களை அமைத்தல், துளையிடுவதற்கு வசதியாக இருக்கும்படி ஏற்பாடுகளைச் செய்தல், பிற உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தாக இருக்கிறது. நிலத்தைப் பயன்பாடுபடுத்துவதில் ஏற்படும்  மாற்றம், இயற்க்கை வடிகால் முறையில் மாற்றம்கழிவுநீரை வெளியேற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகள். . இந்நிலையில் ஒலி, காற்று ஆகிய வற்றில் ஏற்படும் மாசுபாடுகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்றவையும் இந்நிலையில் முதன்மையான அக்கறைகளாகும்.

நிறுவப்பட்ட மறுகணம் முதல் பிறகு துளையிடும் பணி தொடங்கியதும், 24*7 மணி நேரமும் டீசல் ஜெனரேர்ட்டர்களினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி கிணறு செயல்படும், தேவைப்ப்டும் ஆழத்தை தொடும்வரை. ஒரு காலத்தில் துளையிடுவதற்கான முறை தொடங்கிய பொழுது நாம் விரும்பும் ஆழத்தைத் தொடும்வரை 24ஙீ7 டீசல் ஜெனரேட்டரில் உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலால் இந்தச் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது. செயல் பாடு தொடரும் காலத்தில் அதே நேரத்தில் டீசல் ஜெனரேர்ட்டர்கள் இயக்கப்படுவதனாலும் வாகனங்களின் இயக்கத்தினாலும் போக்குவரத்தினாலும் காற்று, ஒலி ஆகிய மாசுபாடுகள் ஏற்பட்டன என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியவை.

ஆழ்துளையிலிருந்து வெளியேறக் கூடியது . சேரும் சகதியும் இணைந்த திரவம் (WBM) துளையின் உள் அமைப்பு சிதைந்துவிடாமல் பாதுகாக்கின்றது,ப்பதற்கு இது உதவி செய்யும். துளையிடும் உளிதண்டை குளிரவைக்க மற்றும் உயவிடவும் பயன்படுகிறது துளையிடலின்போது தெறிக்கும் சிறு துண்டு துக்காணி களைக் மேல் பரப்புக்கு கொண்டு சேர்க்கவும் பயன்படுகிறது. குளிரவைத்து உராய்வின்றி தடைகளிலிருந்து விடுவித்து உரிய இடத்துக்குக் கொண்டு சேர்க்கவும் தெறிபட்ட துகள்கள் ஆழப் பதிந்திருந்தால், அவற்றை விடுவித்து (சேறு, மணல், பாறை) மேற்பரப்பிற்கு கொண்டு சேர்க்கவும் பயன்படுகிறது. (WBM) என்பது துளையிடுதலில் வெளியாகும் குறைந்தபட்ச நச்சுத்தன்மையுள்ள திரவமாகும். இருந்த போதிலும் துளைச் சில்லுகளுடன் சேர்ந்து அதுவும் கெட்டுப்போகிறது என்றும் ஆய்வு நிலையில் ஆர்செனிக், காட்மியம், குரோமியம், பாதரசரஸம் போன்றவை அந்தந்த மண்ணின் இடத்தின் புவியியல் தன்மையைப் பொறுத்துக் மாறுபடும். கலந்து விடுகின்றன. இது பயன்பாட்டுக்கு உதவாத ஒரு ஓடை வாயு; ஆனால் அதைக் பாதுகாப்பாக கவனமாக அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஸ்டீல், கான்கிரீட்காங்ரீட் ஆகியவற்றாலான உறையிட்டவாறே துளையிடுதல் தொடர்ந்தது. ஸ்டீல் உறை கிணற்றில் மண் சரிவிலிருந்து பாதுகாக்கிறது – காங்ரீட், ஸ்டீல் ஆகியவை தண்ணீரைத் தன்னுள் வாங்கி வைத்திருக்கும் மண், பாறை – படிவுகளை எண்ணெய்யிலிருந்தும் வாயுவிலிருந்தும் ஹைடிரோ கார்பனிலிருந்தும் தடுக்கிறது – இந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உவர் நீர் கிணறு உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து பூமிக்கடியில் இருந்து உருவாகி வருகிறது. ஆயினும் துளையிடுதல், உறையிடுதல் இவற்றுக் கிடையிலான நேரத்தில் வெளிப்படும்  நீருருஞ்சிப் படிவு (மண், பாறை) களினால் துளையிலிருந்து வெளியேறுகிற வேதிப்பொருட்கள் அல்லதுளுக்கு அல்லது  வேறு  மூலப்பொருட்களினால்ளுக்கு   ஆழ்நிலநீருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஓர் ஆழ்துளைக் கிணறு செயல்படும் காலத்தில் எதிர்கொள்ளப்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் யாவை?

டெல்டாப் பகுதிகளில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு செயல்படாத நிலையில் அது அமைந்துள்ள நிலத்தை மீண்டும் பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும், துளையிடுவதற்கு முன் எப்படி இருந்த்ததோ அதாவது வேளாண்மை செய்வதற்கு ஏற்றவகையில் நிலைக்கு கொண்டுவர வேண்டும்.

கொண்டுவரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தனபாலின் கூற்றுப்படி இதுபோன்ற நிகழ்வு மிகமிக அபூர்வமாகவே இருக்கிறது. காவிரிப் பாசன நிலங்களில் 600 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. அவற்றில் 200 கிணறுகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. எஞ்சியிருப்பவை ஹைடிரோ கார்பன்கலை வெளிக் கொண்டுவருவதற்கு உதவியாக ஆழ்துளைக் கிணற்றினுள் நீரை உட்செலுத்துவதற்காகப் பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படும் சிதனபாலன் சொல்கிற தகவலின்படி, “இவ்வாறு கைவிடப்பட்டவற்றில் நிலம் எதுவும் வேளாண்மைக்கானதாக மாற்றப்படவில்லை. , ஒரு ஆழ்துளைக் கிணறு ஐந்து ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த ஒரு கிணறு சுற்றியுள்ள 2000 ஏக்கர் வளமான நிலத்தை சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த புதர்க்காடாக மாற்றிவிடுகிறது. இதனால் அந்த நிலங்களில் வேளாண்மை கைவிடப்படுகிறது.”

நெடுவாசல் கிராமத்தின் அருகில் உள்ள கருக்காங் குரிச்சியில் தோண்டப் பட்ட ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றியுள்ள நிலங்கள் நான் மேலே சொன்ன விஷயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. சுற்றியுள்ள நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பொழுது செழிப்பாக இருந்த அனைத்து தாவரங்களும் கிணறு தோண்டப்பட்ட பிறகு அற்றுப் போயின. நிலங்களை மூடி உறையிட்டது போல கருவேலச் செடிகள் முளைத்து வளர்கின்றன.

உற்பத்தியிலிருக்கும் கிணறுகள் வேறுவகையான சிக்கல்களை உருவாக்குகின்றன:

உற்பத்தி செய்யப்பட்ட தண்ணீர் – அதாவது ஆழ் தளத்தில் உள்ள மணல் (அ) பாறைப் படிவுகளில்களஞ்சியத்தில் எண்ணெய் அல்லது எரிவாயு என்பவை ஹைடிரோ கார்பன்களுடன் சேர்ந்து தங்கியிருக்கின்றன. அவை மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்படும்பொழுது தண்ணீரோடு சேர்ந்துதான் வெளிப்படுகின்றன. எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைப் பிரித்தெடுக்கும் செயல்பாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தண்ணீர் என்பது முக்கியமான கழிவுப் பொருளாகும். உற்பத்தியைபிரித்துத் தூய்மைப் படுத்தும் நிலையில் அதிகரிக்க எண்ணெய், எரிவாயு படிந்துள்ள தளங்கல்களஞ்சியம் உயர் அழுத்த நீரினால் மூழ்கடிக்கப் படுகின்றன. உற்பத்தியின் தன்மையைப் பொறுத்தும் கிணற்றின் வயதைப் பொருத்தும் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி செய்யப்பட்ட நீரின் அளவு மாறுபடும்.

ஒவ்வொரு பேரல் எண்ணைக்கும் உற்பத்தி செய்யப்பட்ட நீரானது பிரித்தெடுத்தளின் போது இரண்டு முதல் ஒன்பது பேரல்கள் வரை உற்பத்தியாக வாய்ப்புள்ளது. உற்பத்தியான ஒவ்வொரு பேரல் தண்ணீரும் ஒவ்வொரு பேரல் எண்ணெய்யைப் பிரித்தெடுக்க முடியும்.

இந்த உற்பத்தி செய்யப்பட்ட தண்ணீர் என்பது, எதனையும் அரித்துச் சிதைக்கும் ஆற்றல் கொண்ட உயர் அளவு உப்புத் தன்மை கொண்டதாகும். மற்றும் இதில் ஹைரோ கார்பன் இது போன்ற நச்சுத் தன்மை கொண்டது பென்சீன், பாலிசைக்கிலிக் அரோமாடிக்ஸ், கன உலோகங்கள் மற்றும் இயற்ககை நிகழக்கூடிய கதிரியக்கமுடைய வஸ்துக்கள் போன்ற கரைந்த யுரேனியம், ரேடான், கதிரி. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் உடன் பயன்படக்கூடிய பென்ஸின் என்ற நிறமற்ற திரவத்தையும் தன்னில் கொண்டிருக்கிறது.யம் உள்ளடக்கியது. இரசாயண கழிவுகளைக் குழாய்கள் அல்லது நீர்மக் கொள்கலன்களின் உட்பகுதியில் தொழிலக நீரியற் கழிவுகள் கடத்த அல்லது தேக்கும் போது அரிப்பு ஏற்படலாம், வளரும் செதில்கள் அல்லது உப்பு வேதியியல் வினைபுரிந்து உப்பு சேகரங்களை உருவாக்கிறது.

மாறி மாறி சுழற்சி முறையில் கனமான உலோகங்கள், அணுவைப் பிளக்கும்பொழுது உருவாகும் ஆபத்தான, கதிரியக்கமுள்ள திரவநிலையிலான யுரேனியம் போன்றவையும் மருத்தவத்தில் பயன்படக்கூடிய நிறமற்ற கதிரியக்க முள்ள தனிமங்கள், ரேடியம் போன்றவற்றோடு ஹைடிரோ கார்பன்களையும் உள்ளடக்கியது.  இந்த இரசாயண கழிவுகளைக் குழாய்களின் வழியாகவோ அல்லது நீர்மக் கொள்கலன்களின் உதவியோடு தொலைவாகக் கொண்டு சென்று சேமித்து வைத்தால் வேதியியல் வினைபுரிந்து உப்பு சேகரங்களை உருவாக்கி தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து விகிதம் நாளுக்கு நாள் அதிகரிக்கக் கூடியதாகும்.

இந்தக் கழிவுகளில் உள்ள பொருட்களின் சேர்மான விகிதத்தைப் பொறுத்து நச்சுத்தன்மை அதிகரிக்கும். இவை ஆபத்தானவை என்ற எச்சரிக்கை உணர்வோடு மிகக் கவனமாகக் கையாளப்படவேண்டும்.

ONGCயின் டெல்டாப் பகுதித் திட்டங்கள் பற்றிய அறிக்கையில் இந்த ஆபத்தான கழிவுகளைக் கையாள்வதற்கு 21 அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள தாகவும் அவை நாள் ஒன்றுக்கு 70 மில்லியன் லிட்டர்கள் உற்பத்தித் தண்ணீரைக் கையாளும் திறன் கொண்டவை எனச் சொல்லப்படுகிறது. இவ்வாறு கையாளப் பட்ட தண்ணீரில் ஒரு பகுதி (ஹைடிரோ கார்பன் படிவுகளைளில் அலசுவதற்காக) உட்செலுத்தப்படும் நீராகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. எஞ்சியிருப் பவை பம்புகளின் மூலமாக பழைய கிணறுகளுக்குள் செலுத்தப்படுகின்றன. தளப்படிவுகளில் உள்ள எண்ணெய் எரிவாயு கலந்த ஹைடிரோ கார்பன்களை வெளியேற்றி மேலே கொண்டுவருவதற்காக ஆழ்துளைக் கிணற்றின் உட் செலுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கான மற்ற நாடுகளில் தெரிவிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுவதன் வழியேதான் இங்கும் நிர்வகிக்கப்படுவதாகப் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் இந்தியாவைப் பொறுத்தவரை உற்பத்தி செய்யப்பட்ட தண்ணீர் மிகக் கவனக்குறைவாகவே கையாளப்படுகின்றது. ணிமிகிசுற்றுச்சுழல் தாக்க  அறிக்கையின்படி, உற்பத்தி செய்யப்பட்ட தண்ணீரினால் ஏற்படும் விளைவுகளைத் தெரிவிக்கவும் அதற்குரிய முறையில் செயல்படுவதற்காகவும் தான் உலகம் முழுமைக்குமான அந்த விதிகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன; ஆனால் இங்கோ கழிவுநீர்க் கால்வாய்களில் விதிகளைத் தள்ளிவிடுவதைத் தவிர வேறொன்றும் செய்யப்படுவதில்லை. பொதுமக்களிடம் முன்வைக்க அவர்களின் கைவசம் எந்தத் தகவலும் இல்லை.

இதனால் நிலத்தடி நீர் கெட்டுப் போவதற்கும் வாய்ப்புள்ளது. உற்பத்திக் கிணறுகள் தொடர்ந்து செயல்பட இயலாத நிலையில் அல்லது கிணறுகள் சிதைவுற்ற நிலையில் ஹைடிரோ கார்பன்கள் இணைந்த உற்பத்தி செய்யபட்ட நீரைத் தன்னுள் வைத்திருக்கும் பாறை அல்லது மணல் அடுக்குகளிலிருந்து வெளிப்பட்டு மேலெழும்பி வருவதுமுண்டு. கைவிடப்பட்ட அல்லது மாதிரிக்காகத் தோண்டப்பட்ட கிணறுகளிலும் இவ்வாறு நிகழமுடியும். அவை அடைபட்டுப் போகாமலும் இருக்கலாம்; அல்லது எங்கே அடைபட்டிருக்கிறதோ அங்கே சேதமடைந்ததுவும் காலம் முழுக்க அப்படியே இருக்கும். எங்கே எப்பொழுது இவ்வாறு நிகழ்கிறதோ அங்கே, ஹைடிரோ கார்பன்கள் அவற்றோடு இணைந்துள்ள தண்ணீர் ஆகியவை (குடிநீர் ஆதாரங்களை நஞ்சாக்கும் வகையில்) நிலத்தடி நீர்ப்படிவுகளுடன் கலந்துவிடவும் முடியும்.

செயல்படாத கிணறுகள் அடைக்கப்படாமல் உடைபட்டிருக்கிறதாவென அறிவதற்காக அல்லது குறைபாடுகளுக்காக வழக்கமாக மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்குள்ளாகும் நெடுவாசல் அருகில் இருந்த ஆய்வுக்குள்ளான கிணறு 2009 இல் மேற்பகுதி மூடப்பட்ட நிலையில் கவனிக்கப்படாமல்தானிருக் கிறது இன்றுவரை.

நிலத்தடி நீர், நிலத்தின் மேலிருக்கும் நீர், நிலங்கள்.. என எல்லாமும் கெட்டுப்போகத்தான் போகிறது. முறையாகக் கையாளப்படாத கழிவு நீரோடையினால் நிலத்தடி நீர், நிலத்தின் மேலிருக்கும் நீர், நிலங்கள் என அனைத்தும் கெட்டுப்போகும் வாய்ப்பிருக்கிறது   உதாரணமாக அங்கும் இங்குமாக சிந்தி கிடக்கும் உற்பத்தி செய்யபட்ட நீர், பாழான நச்சுத் தன்மையுள்ள ஆவிகள் எடுத்துக்காட்டாக வெளியேற்றப்படும்பொழுது சிந்தி வழிகின்ற அல்லது வெளியே தெறித்து விழுகிற உற்பத்தி செய்யப்பட்ட நீர், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மேற்பரப்பில் சேமித்து வைக்கப் படுகிற உற்பத்தி நீர் அல்லது எண்ணெய்க் கழிவுகள் குழாய்களிலிருந்து கசிந்து வருகிற குருடாயில்கச்சா எண்ணெய், போன்றவை.

கண்ணில் படாத வெளிப்படுதல்கள், கசிவுகள் ஆகியவற்றால் காற்று மாசுபாடு நிகழமுடியும். ஆவியாகும் கரிம கலவை(VCOs),. திடீரென எதிர்பாராமல் வெளியேறக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களடங்கிய இயற்கையான கூட்டுப் பொருட்கள் (அந்த வேதிப்பொருள்கள் இரத்த வெள்ளை அணுப் புற்றுநோய்க்குக் காரணமாகிறது). எத்தில் பென்ஸின் (ethyl benzene), எக்ஜைஸிலீன் லேனே (xylene), டால்யுயுனே (toluene) ஆகியவை காற்றில் ஒன்று சேரமுடியும். திடீரென காற்றுப்போல் வீசுவது, சிறிது நேரம் சுடர்விட்டு எரிவதுமான நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்படுவது பொதுவாக நல்லசெயல்பாடன்று. அது ஓர் எரிபொருள் உற்பத்தி செய்யபடாமல் கழிவினையொத்துவீன் ஆவதை குறிக்கிறது. அது விளைவிக்கப்படுவதாக இருக்கிறது.

ஆயினும் எங்கே இது செயல்படுகிறதோ அங்கே தரையில் வீசும் காற்றின் தன்மை சீர்கெட்டு அந்தப் பகுதிக்குரிய நோய் ஆபத்துக்களை உருவாக்குகிறது. பல ஆவியாகும் கரிம கலவை (VCOs), திடீரெனவும் எதிர்பாராமலும் மாறக்கூடிய இயற்கைக் கூட்டுப் பொருள்களில் பல உமிழப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடோடு ஒருங்கிணையலாம் (தரை நிலையில் ஓஸோனை உருவாக்குவதற்கு டீசலைப் பயன்படுத்துவதால் வெளியேற்றப்படுகின்றது) இணைந்திருக்கின்றன. இது மூச்சு விடுதல் தொடர்பான எரிச்சலைல் நோயை ஏற்படுத்தக் கூடியது.

மீதேன் காரணமாகஎன்பது – ஓர் ஆற்றல் வாய்ந்த பசுமை மண்டல வாயு – இயற்கை யான வாயுவின் முக்கியமான மூலக்கூறு, இந்த வாயுக்கள் வளிமண்டலத்தினுள் நுழையும்பொழுது கவனிக்கத்தக்க முறையில் கணிசமான அளவுக்கு புவிவெப்ப மயமாதலை அதிகரிக்கச் செய்யும் ஆபத்து உள்ளது.

வெளியே உயர் அழுத்த வீச்சு வீசுதல், திடீரென ஏற்படும் வெடிப்புகள் வெடித்து வெளியே வீசப்படுதல் போன்ற ஆபத்தான நிகழ்வுகள்:

துளைக்குள் ஏற்படும் திடீர் உயர் அழுத்த எழுச்சியின் பாய்வியக்கம் காரணமாக –  கிணற்றின் வாய்ப்பகுதியிலிருந்து வாயுக்கள் வெளித்தள்ளப்படுவது அல்லது வெடித்துச் சிதறுதல் காரணமாக – இவை மோசமான ஆபத்து நிறைந்த நிகழ்வுகள் கிணற்றுப் பகுதியில் இதன் விளைவாக சூழலில் மிகப்பெரிய மாசு ஏற்படுத்தும் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. ஒரு வீச்சில் வெளிப்படுவது சில நிமிடங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கும்.

2010 இல் மெக்ஸிகோ வளைகுடாவில் எண்ணெய் நிலைகளில் நிகழ்ந்த மிக மோசமான வெடிப்புகள், ஆழ் நில நீர்த் தெறிப்புகள்கசிவுகள் ஆகியவை இன்றுவரை அதீத ஆபத்தின் வெளிப்படாகடலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த மூர்க்கமான வெடிப்புகள் கட்டுக்குள் வருவதற்கு ஐந்து மாதங்கள் ஆயிற்று.

வெடித்துச் சிதறலால் ஏற்படும் ஆபத்துக்களைக் கண்டறிந்து அவற்றைக் குறைப்பதற்கான பாதுகாப்புக் கருவிகளைக் கண்டுபிடிப்பதும் முறையான செயல்பாடுகளை கவனமாகவும் அக்கறையோடும் மேற்கொள்வதுமான செயல்கள் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. இவை அரிதாகவே காணப்படுகின்றன.

நிலம் உள் அமுங்குவதும்நிலத்தில் தீடீர் பள்ளம் மற்றும் உப்புத் தன்மைத் ஊடுருவல்தலையீடும் –

அமைதியான நிலத்தில் பெரிய அளவில் தண்ணீர் அல்லது ஹைடிரோ கார்பன்கள் பிரித்தெடுத்தல் காரணமாக நிலத்தில் தீடீர் பள்ளம் ஏற்படும். போன்ற நீர்மங்களைப் பெறமுடியும்.  அமெரிக்க புவியியல் ஆய்வுச் சேவை மையம் ஒன்றின் கூற்றுப்படி, “இந்த தூண்டுதளினால் ஏற்பட்ட பள்ளம், ஒன்று துணை பிராந்திய அல்லது அந்த அந்த இடத்திற்குறிய பரப்பளவிற்கு ஏற்ப இருக்கும், அதிகமான பாதிப்பானது கடலோர சமவெளிகள், கடல்மட்டத்திலுள்ள சதுப்பு நிலம், ஆகிய இடங்களில் சிரிய அளவில் நில மேற்பரப்பு தாழ்ந்தாலும் அப்பகுதி நிரந்தரமாக மூழ்கும்.

‘‘இந்த உற்பத்தி மிகவும் அமைதியானது. சார்பு நிலப்பகுதி அல்லது விரிவடைந்த உட்பகுதியில், சமவெளிகளில், கடல்மட்டத்திலுள்ள ஈரப்பதமான நிலப்பகுதி ஆகியவை மிகச்சிறந்த பயன் தரக்கூடியவை.’’

குறிப்பாக டெல்டா நிலப்பகுதிக்கு இது ஒரு சிக்கலான விசஷயமாகும். இப் பகுதி ஏற்கனவே கடல் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக உப்புத் தன்மைத் ஊடுருவலை சந்தித்து வருகிறது, பரவலாக மணல் குவாரிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருப்பதால்  நிலத்தடி நீராதாரத்தை உயரச்குறைய செய்தது, எண்ணெய் மற்றும் எரிவாயு நீங்கலாக. தவிர்த்த நிலத்தடி வளங்கள் சுரண்டப்படுதல் ஆகியவற்றால் தஞ்சைப் பகுதி கொதிநிலையில் உள்ளது.

குறிப்பு: எண்ணெய், எரிவாயு பிரித்தெடுத்தல் தொடர்பான பிரிவுகள், ஹைடிரோ கார்பன் உற்பத்தியினால் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம் சார்ந்த கேடுகள் போன்றவை குறித்த நிறையத் தகவல்கள் மேலே தரப்பட்டிருக்கின்றன பல்வேறு மூல ஆதார ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ளது.

பிற படைப்புகள்

Leave a Comment