ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 11கவிதை

நெகிழன் கவிதைகள்

by olaichuvadi admin January 1, 2022
January 1, 2022

சந்தோஷ நிறம்

மரம் நிறைய இலைகள்
சந்தோஷ நிறமான பச்சையில்
மிளிர்கின்றன
ஒன்றை மட்டும்
தின்ன ஆரம்பித்திருக்கிறது
துயரின் நிறமான பழுப்பு
பச்சை என்ற சந்தோஷக் கைகள்
கைவிடும்போது
ஒரு இலையானது
பள்ளத்தாக்கில் அலறிக்கொண்டே
விழுகிறது
பள்ளத்தாக்குக்குள் பள்ளத்தாக்கென
அலறலுக்குள் அலறலென
விரிந்துகொண்டே செல்கிறது.

அதிசய மரம்

சாக்கடையோரம் கிடந்தவனை
தூக்கிச் சென்று
மரத்தடியில் கிடத்துகிறான்
தூரத்தில் நின்றுகொண்டு
போவோரிடமும் வருவோரிடமும்
சொல்கிறான்
அங்கே பாருங்கள்
அந்த அதிசய மரம்
தனக்குக் கீழே
நிறைய இலைகளையும்
ஒரு மனிதனையும் உதிர்த்திருக்கிறது.

வளர்ப்புக் கடிதங்கள்

கடிதங்களை
காற்றில் பறக்கவிட்டபடி செல்கிறார் தபால்காரர்
அவர் நம்புகிறார்
அவை
உரிய முகவரியை அடையும் என்று
இதில்
ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை
அவர் வளர்த்த கடிதங்கள்
அவர் சொன்ன பேச்சை
கேட்கும் தானே

விளையாட்டு

கத்தை கத்தையாய்
அடுக்கப்பட்டு
கட்டப்பட்டிருக்கின்றன தாள்கள்
தூக்கினால் திணறும் எடை
பார்த்தால் அத்தனை இறுக்கம்
தாள் நுனியில் தீ மூட்டுகிறேன்
எல்லாம் பற்றி எரிகிறது
உடன் சேர்ந்து
பஸ்பமாகிறது ஏதோ ஏதேதோ
இப்போது
வெள்ளையிலிருந்து கறுப்புக்கும்
எடையிலிருந்து எடையின்மைக்கும்
மாறிவிட்டது
நான்
ஊதியூதி விளையாடுகிறேன்
அது
பறந்து பறந்து விளையாடுகிறது.

அனல்

அமாவாசை தோறும்
சித்ரா வருவாள்
என்னைப் பார்ப்பதுபோல்
வாட்ட சாட்டமான
அவனைக் காண்பாள்
அவன்
என்னிடம் பேசுவது மாதிரி
அவளிடம் பேசுவான்
அவள் நீங்கிய பின்
பந்தெனத் திரட்டி
நெஞ்சில்
தீபமாய் ஏந்திய காற்றை
மெல்ல இறக்கிவைப்பேன்.

          
 
         
issue 11olaichuvadi magazineஇதழ் 11ஓலைச்சுவடிகவிதைகள்நெகிழன் கவிதைகள்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi admin

முந்தைய படைப்பு
ஆகாசமுத்து கவிதைகள்
அடுத்த படைப்பு
மதவிலாசம்

பிற படைப்புகள்

செல்வசங்கரன் கவிதைகள்

August 22, 2022

சூ.சிவராமன் கவிதைகள்

August 21, 2022

ஆனந்த் குமார் கவிதைகள்

August 21, 2022

மதார் கவிதைகள்

August 21, 2022

சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

August 21, 2022

இன்னும் சில கவிதைகள்

August 21, 2022

சடம் ஜெயமோகன்

January 1, 2022

கார்த்திக் நேத்தா கவிதைகள்

January 1, 2022

தொற்று வா.மு.கோமு

January 1, 2022

ஜீவன் பென்னி கவிதைகள்

January 1, 2022

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • தீடை   
    ச. துரை
  • வெக்கை (சிறுகதை)
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • செம்புலம் (சிறுகதை)
  • சூ.சிவராமன் கவிதைகள்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top