ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 10இதழ்கள்கவிதை

எம்.யுவன் கவிதைகள்

by olaichuvadi November 15, 2021
November 15, 2021

சங்கிலி

அது ஒரு பறவையின் கதை.
இலக்கின்றிப் பறத்தலின்
கதையாக இருந்தது. அதேவேளை,
புலப்படாப் பரப்பைத்
திறந்து வைத்த காற்றின்
கதையாகவும் இருந்தது. ஆமாம்,
அப்படித்தான் இருந்தது,
சீறிவந்த அம்பு தைக்கும் வரை.
அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்
பாய்ந்து
வேடனின் கதையானது.
அவன் பசியின் கதையானது.
குருதி வழிய உயிர் நீங்கியபோது
முடிந்துபோன வாழ்வின் கதையானது.
அப்புறம் ஒரு முழு வாழ்வு
கதையாக மட்டும் மீந்து போனது.

பின்னர்
இதைச் சொல்லும் என் கதையானது
ஏந்தி வரும் தாளின்
கதை ஆனது.
இப்போது
வாசிக்கும் உன் கதைபோலவே
தோன்றவில்லை?!

***

புராதனக் கோயில் விமானத்தில்
பன்னெடுங்காலமாய் ஒட்டிக்
குந்தி வெளிறிய  புறா
ஏனென்றே தெரியாமல்
பறந்து செல்ல முனைந்தது.
எண்ணற்ற மின்னல்களை
இடிகளை பொழியும்  தாரைகளை
ஓயாமல் உரசும் காலத்தை
தாண்டிவந்தபோது இல்லாத
அவசரம் இன்று ஏனோ.

கணக்கற்ற
தூதுப் புறாக்கள்
பந்தயப் புறாக்கள்
காதல் புறாக்கள்
பறந்து கடந்த வானம்
மேகத் துணுக்கும் இன்றி
வெறிச்சிட்டு இருந்ததுவோ

கோபுரத்தை நீங்காது
அழுத்தி வைத்த விசையேதான்
மண்ணை நோக்கி
ஈர்த்ததுவோ,
கீழ் நோக்கி உடல்
இழுபடும் அதே வேகத்தில்
உயரத் துடித்த  ஆன்மாவின்
உந்துதலோ

காலங்காலமாய் ஒடுங்கி
விரிய மறுத்த இறக்கைகளை
மீறி
மேல்நோக்கி எழும்பி
அல்லாடி அல்லாடி
மெல்ல மெல்ல இறங்கியது

மிகச் சில கணங்கள்
தவித்ததுபோல் தயங்கியபின்
தரையில் மோதித்
திப்பிகளானது
சுதைப் புறா.

ஒற்றைச் சாட்சியாய்
நின்றிருந்தேன் –

கட்டற்றுத்  திறந்திருந்த
கோவில் திடலில்
மட்டற்று நான் நிரம்புவதை
தீனமாய் உணர்ந்தவாறு.

***

கண்ணாடிப் பழங்கள் உண்டு
பசியாறுவேன்
மரவட்டை ரயிலேறி
பரதேசம் போவேன்
சிரட்டை நிரம்பிய சமுத்திரத்தில்
திமிங்கிலம் நீந்தியதைக்
கண்டதும் உண்டு

எப்போது கிருமி
எப்போது விசுவரூபன்
எப்போது தூயன்
எப்போது கயவன்

எப்போது
எல்லாமாய் இருப்பவன்
எப்போது ஏதிலி
என்றுரைக்கும் கண்ணாடி
எப்போதும் விரோதி எனக்கு.

மற்றபடி, துக்கமோ
இன்பமோ உறக்கத்தை
சற்றே
விலக்கும்போது
தானாய் நீள்கிறது
என் நாள்.

கண்கூசும்
நனவின் மாயப்பாட்டையில்
யாசித்துத் திரிய
வாய்த்திருக்கிறது எனக்கு.

அழுகிய பழமோ
ஊசிய பண்டமோ
திருவோட்டில் வீழ்கையில்
அமுதமெனப் புசிக்கும்
வல்லமையும்தான்.

***

ஏன் என்னைக் கைவிட்டீர் என
வெட்டவெளியை நோக்கி
உரத்து அரற்றியது
பலவீனத்தின் கணமா
நம்பிக்கையின் தடயமா

எல்லாமே என் செயல் என்றது
ஆணவத்தின் அறிவிப்பா
ஆதுரத்தின் சான்றளிப்பா

நீரில் சொட்டிய  பால்
நிபந்தனையின்றிக் கலப்பது
ஐக்கியத்தின் இசைவா
கையறு நிலையின் ஒப்புதலா

ஒரு கணம் மண்ணில் தெரியும்
வானம்
மறுகணம் தன் இடம்
மீள்வது
ஒருமையின் பாவனையா
இருமையின் உறுதியா

எதிரெதிர்த் துருவங்கள்
ஒரே பூமியில் திகழ்வதென்ன
வரமா சாபமா

கேள்வியின் முனையில் பதிலும்
பதிலின் முனையில் கேள்வியும்
தொங்கித்  தொடர்வது
விசனமா இன்பமா

         more 
 
         more
எம்.யுவன்கவிதைகள்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
லக்‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்
அடுத்த படைப்பு
உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்

பிற படைப்புகள்

கார்த்திக் நேத்தா கவிதைகள்

January 1, 2022

ஜீவன் பென்னி கவிதைகள்

January 1, 2022

நெகிழன் கவிதைகள்

January 1, 2022

ஆகாசமுத்து கவிதைகள்

January 1, 2022

சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

January 1, 2022

பா.ராஜா கவிதைகள்

January 1, 2022

பூவன்னா சந்திரசேகர் கவிதைகள்

January 1, 2022

தேவதேவன் கவிதைகள்

November 15, 2021

சுகுமாரன் கவிதைகள்

November 15, 2021

க.மோகனரங்கன் கவிதைகள் க.மோகனரங்கன்

November 15, 2021

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • சடம்
  • கார்த்திக் நேத்தா கவிதைகள்
  • தொற்று
  • ஜீவன் பென்னி கவிதைகள்
  • காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top