ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 10இதழ்கள்கவிதை

கார்த்திக் நேத்தா கவிதைகள்
கார்த்திக் நேத்தா

by olaichuvadi November 15, 2021
November 15, 2021

 

மனவேலை தணிந்தது

உரித்த பிறகே
ஒன்றுமில்லை என்று புரிகிறது.
நினைவே இன்பம் என்கிறார்கள்
எனில்
வாழ்ந்துபார்க்காமல்
நினைவைப்பெறுவது எப்படி?
அனுபவம் படுத்துவிட்டது
ஆரவாரம் இறந்துவிட்டது
அலையெனத் திமிறி
உணர்வுகள் எழுவதில்லை.
மனவேலை தணிந்ததும்
மகத்துவம் நடக்குமென்றார்கள்
எனக்கு நானே சதா
சிரித்துக்கொண்டிருப்பதுதான்
அந்த மகத்துவமா?

கல்நிழல்

மோனநீட்சியில்
சொல் அறும்.
ஒலி இறந்து
தொனி பிறக்கும்.
உள்ளுறை நாதம்
வெளி நிறையும்.
ஒழுகுநீர் ஆரலைக்
கவ்விப் பறக்கும் கழுகு
மோனம் விரிந்த
அகலிரு விசும்பிடை.
மோனம் என்பது
சென்று சேரும் பாதத்தடம்.
சொற்கள்
கல்லையே நீங்காத
கல்லின் நிழல்.

பாவனை நடனம்

பிறைநிலவை
முழுநிலவாக்கும் பாடலைப் பாடுகிறாள்
சடங்குப்பாடகி.
ஆரோகணித்துப் பறந்த குரலின் பறவை
பிறையில் ஒளிமணியை வைத்துவிட்டுத் திரும்புகிறது.
ஒவ்வொரு மணியாக வைத்து
பிறையை முழுநிலவாக்கினாள்.
உந்தியில் பிறந்து
புந்தியைத் தூய்மை செய்த
குரலின் அதிர்வில்
நுண்மையில் அசைந்தன அவளின் முலைகள். 
அதிர்வு கனிந்து
உடலின் தாளமானது.
தாளத்தில் மயங்கி
காமம் சுழன்றது.
காமத்தைக் கண்டுணர்ந்த
வேலனின் வெறியாட்டில்
முருகனும் சொக்கி நின்றான்.
காமத்தில் கனிந்த காமம்
காமமல்லாத நிலையில்
காமத்தைக் கண்டுகளித்தது.
காமத்தின் நடனத்தை
காமமே கண்டுகளிக்கும்
காமத்தின் வெளியில்
கலவிக்கு வேலையில்லை
புலவிக்கும் வேலையில்லை.

          
 
         
கவிதைகள்கார்த்திக் நேத்தா
2 comments
3
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
செல்வசங்கரன் கவிதைகள்
அடுத்த படைப்பு
கதிர்பாரதி கவிதைகள்

பிற படைப்புகள்

செல்வசங்கரன் கவிதைகள்

August 22, 2022

சூ.சிவராமன் கவிதைகள்

August 21, 2022

ஆனந்த் குமார் கவிதைகள்

August 21, 2022

மதார் கவிதைகள்

August 21, 2022

சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

August 21, 2022

இன்னும் சில கவிதைகள்

August 21, 2022

கார்த்திக் நேத்தா கவிதைகள்

January 1, 2022

ஜீவன் பென்னி கவிதைகள்

January 1, 2022

நெகிழன் கவிதைகள்

January 1, 2022

ஆகாசமுத்து கவிதைகள்

January 1, 2022

2 comments

இரா மதிபாலா October 7, 2019 - 11:38 am

மிகச் சிறந்த படைப்புகளை கொண்ட இதழ்

Reply
இராக்கண்ணன் October 10, 2019 - 12:12 pm

இரண்டாவது கவிதையில் வருகிற “சகோரப் பறவை” எதனைக் குறிக்கிறது கவிஞரே?

Reply

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • தீடை   
  • வெக்கை (சிறுகதை)
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • செம்புலம் (சிறுகதை)
  • சூ.சிவராமன் கவிதைகள்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top