ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 10இதழ்கள்கவிதை

க.மோகனரங்கன் கவிதைகள்
க.மோகனரங்கன்

by olaichuvadi November 15, 2021
November 15, 2021

அபயம்

விரிந்து கிடக்குமிவ்
விண்ணிற்கும் கீழே
விம்மிப் பெருத்த கனவுகளோடு
வியர்த்தமாய் அலைந்திடும்
எம் தேகத்துள்
மூச்சிழையும் மட்டும்
பூச்சிகளின் நாதரே,
மண்ணிற்குமுள்ளே
உம் பசி பொறுத்தருள்வீராக!
மரித்த
மறுகணத்திலிருந்து,
மட்கி அழியத் தொடங்கும் தசைகளோடு,
ஈசனோடாயினும்
கொண்டிருந்த
ஆசையனைத்தும்
அவிந்து போகும்.
மேலும் சில காலம்
மீந்து நிற்கும்
எலும்புகளில்
மிஞ்சியிருக்கும் உப்பு
உமக்குணவாகும்.

உற்ற துணை

ஒரே கூரையின் கீழ்
ஒருவரை மற்றது
உற்றுப் பார்த்தவாறு
உடனுறைவதன்
உதாசீனம்
பொறுக்கவியலாது
பொங்கிவழிந்த
போதொன்றில்
ஒழிந்து போகட்டும்
உபத்திரவமென்று
ஊருக்கும் புறத்தே
ஒதுக்கமாய்
ஓரிடத்தில் விட்டுவிட்டு
ஓய்வாக நடந்து வந்து
வீட்டுப் படியேறினால்
வாலை குழைத்தபடி வந்து
காலை சுற்றுமதைக்
காணவும்
தலைக் கொதித்துப் போய்
ஒங்கியொரு எற்றுவிட
சுருண்டு ஒரு பந்தென
சுவற்றில் மோதிச் சரிந்தது
மெல்லிய கேவலுடன்
மீளவும் எழுந்து நின்று
ஏனெனப் பார்க்க
எனக்குள் எதோவொன்று
உடைந்து சிதறிற்று
அடிபட்டதை
அள்ளியணைத்து
கன்னத்தோடு இழைத்து
கண்ணீர் உகுக்கையில்
புரிந்தது
என் விதியோடு
அறுத்தெறியவியலாதபடிக்கு
பிணைக்கப்பட்டிருக்கும்
நட்சத்திரத்தின்
நகல் அதுவென.

தொன்மம்

காலடித் தடங்களை
கவனமாக அழித்தாயிற்று;
உறுமல்கள் ஒவ்வொன்றையும் உற்றுக் கேட்டு
நினைவினின்றும்
நிரந்தரமாய் நீக்கியாயிற்று;
கதிரொளி நுழையத் தயங்கும்
கானகமதில்
இன்று புலிகள் ஏதுமில்லை.
இருப்பினும்
இருளின் நிழல் மறைவில்
இப்போதும் உலவுகின்றன
நிறைய நிறைய வரிகளோடு
நீளமான வாலும் கொண்ட
கதைகள்.

          
 
         
க.மோகனரங்கன்கவிதைகள்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்
அடுத்த படைப்பு
சுகுமாரன் கவிதைகள்

பிற படைப்புகள்

செல்வசங்கரன் கவிதைகள்

August 22, 2022

சூ.சிவராமன் கவிதைகள்

August 21, 2022

ஆனந்த் குமார் கவிதைகள்

August 21, 2022

மதார் கவிதைகள்

August 21, 2022

சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

August 21, 2022

இன்னும் சில கவிதைகள்

August 21, 2022

கார்த்திக் நேத்தா கவிதைகள்

January 1, 2022

ஜீவன் பென்னி கவிதைகள்

January 1, 2022

நெகிழன் கவிதைகள்

January 1, 2022

ஆகாசமுத்து கவிதைகள்

January 1, 2022

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • தீடை   
  • வெக்கை (சிறுகதை)
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • செம்புலம் (சிறுகதை)
  • சூ.சிவராமன் கவிதைகள்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top