ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 1இதழ்கள்கவிதை

வா.மு.கோமு கவிதைகள்

by olaichuvadi November 15, 2021
November 15, 2021

இரண்டு நாளாய் இடறிச் சென்ற

வானம் பார்த்து ஏமாந்த

கடவுளெனும் முதலாளி

ஆழக்குழி வெட்டி பெரு விதையாய்

அதில் தன்னை

நட்டுவித்துக் கொண்டான்

ஈரோட்டிலிருந்து கோவை செல்லும்

பாசஞ்சர் ட்ரெயினிலிருந்து கட்டம் போட்ட

லுங்கியணிந்தவனொருவன் இறங்கி

ஊருக்குள் வந்து தன்னை ஊருக்குப் புதியவன்

என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்

பின்னாளில் அவன் ஊருக்குப் பழையவன்

ஆகியும் போனான்

ஆள் நடமாட்டமுள்ள சாலையில்

கற்பக விநாயகர் ஓவியத்தை

வார்ணச்சாக்கட்டிகளால் வரைந்து

முடித்தவன் சோர்ந்து போய்

தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

வழியாகச் சென்ற கடவுளின் கால்சட்டைப்

பையில் பைசாக்கள் எதுவுமில்லாததால்

பாவம் என்ற சொல்லை உதிர்த்துச் சென்றார்

கடவுளின் கைப்பேசி எண்ணை எனக்கு

கொடுத்துப் போன கனகவள்ளி சொல்கையில்,

இவர் எப்போதும் எல்லைக்கு வெளியேயே

நடமாடிக் கொண்டிருப்பதாக ஒரு பெண்

சொல்லிக் கொண்டேயிருக்கிறாள் என்றாள்.

விதைப்பதற்காக கண்டங்கத்திரி விதைகள்

சிலவற்றை வைத்திருந்தான் அவன்

இதோ வருகிறேன் என்று இடித்துத் சொல்லியபடி

இருந்த வானம் இறுதியாய்

நாளை வாறேன் என்றோடிப் போனதுவே

விதைகள் அடங்கிய பையை மீண்டும்

பத்திரப்படுத்திவிட்டு டாஸ்மாக் நோக்கி

நடையிட்டான் விதைப்பாளன்.

         more 
 
         more
கவிதைவா.மு.கோமு
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
றங்கனாயகி
அடுத்த படைப்பு
மண்ணும் ஒரு உறவுதான் – கண்மணி குணசேகரன்

பிற படைப்புகள்

கார்த்திக் நேத்தா கவிதைகள்

January 1, 2022

ஜீவன் பென்னி கவிதைகள்

January 1, 2022

நெகிழன் கவிதைகள்

January 1, 2022

ஆகாசமுத்து கவிதைகள்

January 1, 2022

சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

January 1, 2022

பா.ராஜா கவிதைகள்

January 1, 2022

பூவன்னா சந்திரசேகர் கவிதைகள்

January 1, 2022

தேவதேவன் கவிதைகள்

November 15, 2021

சுகுமாரன் கவிதைகள்

November 15, 2021

க.மோகனரங்கன் கவிதைகள் க.மோகனரங்கன்

November 15, 2021

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • சடம்
  • கார்த்திக் நேத்தா கவிதைகள்
  • தொற்று
  • ஜீவன் பென்னி கவிதைகள்
  • காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top