ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 11கவிதை

கார்த்திக் நேத்தா கவிதைகள்

by olaichuvadi January 1, 2022
January 1, 2022

பல்லி படுதல்

புறப்பட்ட ஞான்று
பல்லி ஒலித்தது.
உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.
மூச்செறிந்து மீண்டும்
புறப்பட்டேன்.
பல்லி ஒலித்தது.
உள்நுழைந்து
தண்ணீர் பருகியவாறு
சுற்றிலும் தேடினேன்.
எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.
சடங்கெல்லாம் புரட்டென்று
சடுதியில் கிளம்பினேன்.
செல்லுமிடமெங்கும்
வலுத்தது பல்லியின் ஒலி.
ஓடினேன்.
உடன் ஓடிவந்து
குருமௌனி சொன்னார்:
“உன்னைத் துரத்துவது அறம்,
பயலே”.

விளர்இசை

பாறையில் தனித்துக்கிடக்கும்
அலை கொணர்ந்த வெண்சங்கு
யாதின் மதர்த்த யோனியோ?
காற்றதன் இணையோ?
ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்
அருவக் கலவியின்
ஆலிங்கனக் கதறலின் 
எதிரொலியோ?

அறுமை இவ்வுலகம்

வற்றிய குளத்தின் பிளவில் நெளியும் இருளைக் கொத்தி ஏமாந்த நாரை
துடிதுடிக்கும் மலரைக் கண்ணுறும்.
இறக்கப் போகும் மலரை உணர்ந்து 
ஏறிட்டு விண் பார்க்கும்.
வெளியெங்கும் போர்த்திய 
வெயில் வலையுள் 
கையறு வெண்நாரை
அலகைத் திறந்து மலருண்ணும்
அறுமை உடையது இவ்வுலகம்.

எந்நீர்? 

கணத்தைவிடவும்
குறுகிய காலத்தில்
வாக்கும் மனமும் 
அற்ற நிலையில் 
மெய் அரும்பி 
விதிர்விதிர்த்து 
அறிவு சிலிர்த்து
பரிவு சுரக்க அழுதேன்.
ஏன் அழுதேன்?
அழுதது நானா?

         more 
 
         more
karthik nethaolaichuvadi magazinepoemsஇதழ் 11ஓலைச்சுவடிகவிதைகள்கார்த்திக் நேத்தா
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
தொற்று
அடுத்த படைப்பு
சடம்

பிற படைப்புகள்

சடம் ஜெயமோகன்

January 1, 2022

தொற்று வா.மு.கோமு

January 1, 2022

ஜீவன் பென்னி கவிதைகள்

January 1, 2022

காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும் நாராயணி சுப்ரமணியன்

January 1, 2022

மதவிலாசம் சுஷில் குமார்

January 1, 2022

நெகிழன் கவிதைகள்

January 1, 2022

ஆகாசமுத்து கவிதைகள்

January 1, 2022

விளிம்பு வைரவன் லெ.ரா

January 1, 2022

சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

January 1, 2022

பா.ராஜா கவிதைகள்

January 1, 2022

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • சடம்
  • கார்த்திக் நேத்தா கவிதைகள்
  • தொற்று
  • ஜீவன் பென்னி கவிதைகள்
  • காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top