ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 11கவிதை

சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

by olaichuvadi January 1, 2022
January 1, 2022

1

குடைசலிலிருந்து வானத்தின்
பற்கள் உதிர்கின்றன.
இதற்கு முன்னர்
மேலெழுப்பப்பட்டவர்களின்
உடற்துண்டுகளைப் போல
குடைசல் மழை
குழிச்சதையாய்
ஒரேயடியாய் பொழியும் போதும்
வானச்சீப்பிலிருந்து பற்கள் கரையும்.
ஒரு குருவித் தலைக்கனத்தில்
மேகங்கள் மூடிய எல்லா நாட்களும்
சிதைத்துக் கொன்று
மேலெழுப்பபட்டவர்களுக்கு
துன்பமாயிருந்தன.
ஒட்டுமொத்தமாக
அவர்கள் நேசத்தின்
குடைசலில் இருந்தார்கள்.
ஒரு மின்னலின் மேல் பகுதியில்
அவர்களின் நேசத்தின்
பெரும்பகுதியை
ஒளியேற்றி இருந்தார்கள்.
அதற்கு பிறகான மழையில்
உடற்பகுதியை அவர்களாக
குடைசலில் கரைத்த போதும்
ஒளி நிர்மூலமாகவே இல்லை.

2

அய்ந்து முறை
முக்கியெழுந்தேன்.
என் முகம் கரைந்த நீரிலிருந்து
எனக்கு பல முகங்கள் காட்டப்பட்டன.
மீன்கள் என் அழுமுகத்தை
தின்றபோதிலிருந்து
வெளிறி மிதந்து ஊதும் சுளித்த முகம்
ஒரு தலைப்பிரட்டையின்
கண்களில் ஏறியிருந்தது.
பின்னர் சிரித்த முகமும்
நிலை குலைந்த முகமும்
ஆற்றிலிருந்து துர்வாடையாய்
பரவியிருந்தன.
தலைப்பிரட்டை காணாமலாகும் வரை
இழந்த முகத்தின் கவலையை இருத்த
கடைசியாக
சிதிலமற்று ஒரு முகத்தை
எனக்காய் எடுத்துக் கொண்டேன்.
அது,
வெறுப்பினால்
அய்ந்தாவது முறை முக்கியபோது
ஆச்சரியத்தோடு
கழன்றதாய் இருக்கவேண்டும்.

          
 
         
olaichuvadipoemsகவிதைசப்னாஸ் ஹாசிம்
0 comment
1
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
பா.ராஜா கவிதைகள்
அடுத்த படைப்பு
விளிம்பு

பிற படைப்புகள்

சடம் ஜெயமோகன்

January 1, 2022

கார்த்திக் நேத்தா கவிதைகள்

January 1, 2022

தொற்று வா.மு.கோமு

January 1, 2022

ஜீவன் பென்னி கவிதைகள்

January 1, 2022

காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும் நாராயணி சுப்ரமணியன்

January 1, 2022

மதவிலாசம் சுஷில் குமார்

January 1, 2022

நெகிழன் கவிதைகள்

January 1, 2022

ஆகாசமுத்து கவிதைகள்

January 1, 2022

விளிம்பு வைரவன் லெ.ரா

January 1, 2022

பா.ராஜா கவிதைகள்

January 1, 2022

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • சடம்
  • கார்த்திக் நேத்தா கவிதைகள்
  • தொற்று
  • ஜீவன் பென்னி கவிதைகள்
  • காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top